Home இலங்கை அரசியல் வற் வரியை குறைத்தால் காத்திருக்கும் ஆபத்து

வற் வரியை குறைத்தால் காத்திருக்கும் ஆபத்து

0

தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் வற் வரியைக் குறைத்தால் நாடு மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளப்படும் என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். 

நுகேகொட பகுதியில்  இடம்பெற்ற “இயலும் ஸ்ரீ லங்கா” வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வரிசை யுகம் வேண்டுமா..

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வரிசை யுகம் வேண்டுமா? நாட்டில் தற்போதிருக்கும் நிலையை பாதுகாப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீடு தீயில் எரிந்ததையும் பொருட்படுத்தாமல் நாட்டு மக்களுக்கான ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றுக்கொண்டார். 

எதிர்தரப்பு வேட்பாளர்களில் ஒருவர் நாட்டின் வருமானத்தை குறைக்க எதிர்பார்க்கிறார். மற்றையவர் செலவீனங்களை அதிகரிக்க முயற்சிக்கிறார்.

வற் வரியை குறைத்தால் நாடு நெருக்கடிக்குள் தள்ளப்படும். 2022 ஆம் ஆண்டிலும் அதுவே நடந்தது.

பொருளாதார அறிவின்றி நாட்டை நெருக்கடிக்குள் தள்ளிவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version