Home இலங்கை அரசியல் வாகன இறக்குமதிக்கான அனுமதிகள் இரத்து என வெளியான தகவல்: அரசாங்கம் மறுப்பு

வாகன இறக்குமதிக்கான அனுமதிகள் இரத்து என வெளியான தகவல்: அரசாங்கம் மறுப்பு

0

வாகன இறக்குமதிக்கு வழங்கப்பட்ட அனுமதிகளை இரத்து செய்ய அரசாங்கம்
முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல்களை பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சர்
அனில் ஜெயந்த பெர்னாண்டோ மறுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(23.01.2025) உரையாற்றிய அமைச்சர் பெர்னாண்டோ, அனுமதிகள் மூலம்
வாகனங்களை இறக்குமதி செய்வது இரத்து செய்யப்படவில்லை என்றும், ஆனால் இந்த ஆண்டு
வாகனங்களை இறக்குமதி செய்வது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

வாகன அனுமதி சலுகையை இரத்து செய்யும் நிலையில், அரசாங்கம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த அரசாங்கங்களின் முடிவுகள் 

வாகன அனுமதிகள் தொடர்பாக நிரந்தர முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.
அதே நேரத்தில், அதிகாரிகள் அல்லது தேவையான தகுதிகள் உள்ளவர்கள் சலுகைகளை
இழக்கக்கூடாது.
முன்னைய அரசாங்க காலங்களில், இந்த சலுகைகள் வழங்கப்பட்டபோது, கடந்த காலத்தில்
எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தவறான முடிவுகள் இருந்திருக்கலாம் என்றும் அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தநிலையில், தரவுகளின்படி, சுமார் 15,000 முதல் 20,000 வரை அனுமதிகள் இதுவரை
வழங்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் பெர்னாண்டோ கூறியுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version