Home இலங்கை அரசியல் கலைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேடம் – விநாயகமூர்த்தி முரளிதரன்

கலைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேடம் – விநாயகமூர்த்தி முரளிதரன்

0

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேடம் கலைந்து விட்டதாக முன்னாள் பிரதி அமைச்சரான விநாயகமூர்த்தி
முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (09.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இவ்வளவு காலமும் போலி வேடங்களை போட்டு தேசியம் தேசியம் என பேசி மறுபக்கம் அரசாங்கங்களிடம் இலஞ்சங்களை வாங்கி கொண்டு மக்களை ஏமாற்றியுள்ளனர்.

காத்திரமான தலைமைத்துவம்

எனவே, மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு காத்திரமான தலைமைத்துவத்தை
வழங்க வேண்டும் என்பது எங்களது நோக்கம்.

கடந்த காலத்தில் அந்த சந்தர்பங்களை
அவர்களுக்கு வழங்கியிருந்தேன். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக இருக்கவேண்டும்
என நான் அந்த காலத்தில் இடையூறு விளைவித்ததில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version