Home முக்கியச் செய்திகள் யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம்: மூவர் கைது

யாழில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம்: மூவர் கைது

0

யாழ்ப்பாணம் (Jaffna) – வல்வெட்டித்துறையில் வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக மூன்று பேர்
கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட பிரதிப் காவல்துறை மா அதிபர் காளிங்க ஜெயசிங்கவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவு காவல்துறையினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கைது நடவடிக்கை தொடர்பில் மேலும் தெரியவருகையில், அண்மையில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற ஆறு பேர் வல்வெட்டித்துறை காவல் நிலையத்திற்கு அருகில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறை விசாரணை

குறித்தச் சம்பவத்தினால், மூன்று இலட்சம் வரையான பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக 19 மற்றும் 23 வயதான கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 2 பேரும் அச்சுவேலியைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவல்துறை விசாரணையின் போது துபாயில் இருந்து வீட்டை தாக்க உத்தரவு கிடைத்ததாகவும் அதற்கமைய கூலிப்படையாக குறித்த வன்முறையில் ஈடுபட்டுள்ளதாகதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சந்தேக நபர்களிடமிருந்து ஜந்து வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் வன்முறைக்கு
பயன்படுத்தப்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் மீட்க காவல்துறையினர் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version