Home முக்கியச் செய்திகள் இன்றைய வானிலை முன்னறிவித்தல்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இன்றைய வானிலை முன்னறிவித்தல்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

நாட்டின் வளிமண்டல நிலைமைகள் அடுத்த சில நாட்களில் தீவில் மாலை இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (13.08.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

களுத்துறை, காலி(Galle), மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் காலை வேளையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

வெளியான எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Source: https://ibctamil.com/article/warning-heavy-showers-and-strong-winds-in-srilanka-1723505928?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version