Home முக்கியச் செய்திகள் மன்னார் மாவட்ட மக்களுக்கு சற்றுமுன்னர் வெளியான எச்சரிக்கை

மன்னார் மாவட்ட மக்களுக்கு சற்றுமுன்னர் வெளியான எச்சரிக்கை

0

Courtesy: nayan

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட
அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும்
மழையினால் பேராறு குளத்தின் பாதுகாப்பு கருதி வான் கதவு ஒன்று இன்று
செவ்வாய்க்கிழமை (9) திறக்கப்பட்டுள்ளது.

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்பு

இதனால் மன்னார் மாவட்ட மாந்தை மேற்கு பிரதேசத்தினூடாக செல்லும் பறங்கி ஆறு,
சிப்பி ஆறு மற்றும் பாலி ஆறு ஆகியவற்றின் நீர்மட்டம் குறிப்பிட்ட அளவு
உயர்வதற்கான வாய்ப்பு உள்ளது.

எனவே ஆற்றின் தாழ்நில பிரதேசங்களான சீது விநாயகர், கூராய்,
தேவன்பிட்டி, ஆத்திமோட்டை, அந்தோனியார்புரம், பாலி ஆறு ஆகிய பகுதிகளில்
வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்கவும்.

அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை

கால்நடை மேய்ப்பவர்களும் வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பு பெறும்
வகையில் உங்கள் கால் நடைகளை பராமரிக்கவும். தொடர்ச்சியாக வழங்கப்படும்
முன்னெச்சரிக்கைகளை கவனித்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மன்னார்
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.    

NO COMMENTS

Exit mobile version