Home இலங்கை சமூகம் மன்னாரில் தர்பூசணி மற்றும் நொங்கு விற்பனை அமோகம்!

மன்னாரில் தர்பூசணி மற்றும் நொங்கு விற்பனை அமோகம்!

0

நாடளவிய ரீதியில் நிலவி வருகின்ற கடும் வெப்பமான காலநிலைகாரணமாக பொது மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர் கொண்டு வருகின்றனர்.

வெப்பத்தின் அளவும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், மன்னார் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கத்தை சமாளிப்பதற்கு தர்பூசணி மற்றும் நொங்கு கொள்வனவுகளில் பொதுமக்கள் அதிகம் ஈடுபடுகின்றனர்.

உள்ளூர் சந்தைகளில் தர்பூசணிகளின் விலை சடுதியாக குறைந்துள்ள நிலையில் மக்கள் அதிகளவான தர்பூசணிகளை கொள்வனவு செய்து வருகின்றனர்.

விற்பனை அமோகம்

 அதே நேரம் நொங்கு சர்பத் போன்ற இயற்கையான பானங்களையும் பருகி வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.

மன்னார் நகர் பகுதியில் பல இடங்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபரிகளால் தர்பூசணி விற்பனை இடம் பெற்று வருகின்றமை அவதானிக்க கூடியதாக உள்ளது.

Source: https://ibctamil.com/article/watermelon-and-nongu-saffron-are-popular-in-mannar-1714464444

NO COMMENTS

Exit mobile version