Home இலங்கை சமூகம் அரிசி மாபியாவை கட்டுப்படுத்தும் வழி: வடக்கு மாகாண ஆளுநர் விளக்கம்

அரிசி மாபியாவை கட்டுப்படுத்தும் வழி: வடக்கு மாகாண ஆளுநர் விளக்கம்

0

அரிசி மாபியாவை கூட்டுறவுத்துறையால் மாத்திரமே கட்டுப்படுத்துவதற்கு முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

தந்தை செல்வா
அரங்கில் இன்று(10.05.2025) சனிக்கிழமை இடம்பெற்ற இளம் கூட்டுறவாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“அரிசி மாபியாவைக் கட்டுப்படுத்துவதற்காக, கூட்டுறவு அபிவிருத்தி வங்கி ஊடாக
நெல் கொள்வனவுக்கு நாம் கடன்களை வழங்குகின்றோம். நெல்லுக்கான நிர்ணய விலையை
விட கூடுதலான விலைக்கு விவசாயிகளிடமிருந்து வேறு மாகாண தனியார் அரிசி ஆலை
உரிமையாளர்கள் நெல்லைக் கொள்வனவு செய்கின்றார்கள்.

கூட்டுறவு அமைப்புக்களை வலுப்படுத்தல்

விவசாயிகளும் தமக்கு
கூடுதலான இலாபம் கிடைக்கின்றது என விற்பனை செய்கின்றார்கள். அவர்கள் இவ்வாறு
கொள்வனவு செய்யும் நெல்லை பதுக்கி வைத்திருந்து, அரிசிக்கான விலையை
தீர்மானிப்பவர்களாக மாறுகின்றார்கள். கடந்த காலங்களில் நெல் அறுவடையின்போது
அரிசியின் விலை குறைவடையும்.

ஆனால், தற்போது அரிசியின் விலையில் மாற்றமில்லை.
இவ்வாறு தனியார் அரசியின் விலையை தீர்மானிப்பதை மாற்றியமைப்பதற்கு எமது
கூட்டுறவு அமைப்புக்களை வலுப்படுத்த வேண்டும்.

அவர்கள் எங்கள்
விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்து சிறியதொரு இலாபத்துடன்
கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக சந்தை விலையை விட குறைந்த விலைக்கு விற்பனை
செய்யும்போது மக்கள் பயனடைவார்கள். அரிசி மாபியாவையும் கட்டுப்படுத்த
முடியும். 

NO COMMENTS

Exit mobile version