Home முக்கியச் செய்திகள் தமிழர் தாயகத்தில் கொடூரம் :கணவனை கொலை செய்த மனைவி கைது

தமிழர் தாயகத்தில் கொடூரம் :கணவனை கொலை செய்த மனைவி கைது

0

காலை உணவு புட்டு அவித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை
வெட்டியும் கோடரியால் தலையில் தாக்கியும் கொலை செய்த பின்னர் காவல்
நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்த மனைவியை கைது செய்துள்ள சம்பவம் இன்று
திங்கட்கிழமை (15) மட்டக்களப்பு வாகனேரியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர்
தெரிவித்தனர்

வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சோந்த 46 வயதுடைய விவசாயியான 4 பிள்ளைகளின்
தந்தையான வைரமுத்து நவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

புட்டு அவித்து தருமாறு கணவன் கேட்டதால் வெடித்த முரண்பாடு

உயிரிழந்தவர் வழமைபோல வேளாண்மை காவலுக்காக நேற்று
ஞாயிற்றுக்கிழமை(14) இரவு வீட்டை விட்டு வெளியேறி வயலுக்கு சென்று சம்பவ தினமான
இன்று காலையில்(15) வீடு திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் மனைவியிடம் காலை உணவாக புட்டு அவித்து தருமாறு கோரியுள்ளார்
இதனை தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது
சண்டையாக மாறியது. இந்த நிலையில் பகல் 11.30 மணி அளவில் கத்தியால் கணவரின் கழுத்தில்
தாக்கியதுடன் கோடரியால் மண்டையை பிளந்ததையடுத்து அவர் சம்பவ இடத்தில்
உயிரிழந்தார்

வாழைச்சேனை காவல் நிலையத்தில் சரணடைந்த மனைவி

இதையடுத்து தாக்குதலை மேற்கொண்ட பெண் வாழைச்சேனை காவல் நிலையத்தில்
கத்தியுடன் சென்று சரணடைந்து தான் கணவனை வெட்டிக் கொலை செய்துள்ளதாக குற்றத்தை
ஒப்புக்கொண்ட நிலையில் அவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தடயவியல் பிரிவு காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு
சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்டு பிரேத
பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நீதிமன்ற அனுமதி பெறும் நடவடிக்கை
முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version