முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, தங்காலை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெலியத்த சனா, மக்கள்
விடுதலை முன்னணியின்(ஜே.வி.பி) தீவிர உறுப்பினர் என வீரவன்ச வெளியிட்ட
பொது அறிக்கை தொடர்பான 2ஆம் கட்ட விசாரணைக்காக, இன்று(12.10.2025) முற்பகல் 10 மணிக்கு
தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு
விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், மீண்டும் முன்னிலையாகி வாக்குமூலம் அளிக்க மாற்று திகதியை அவர்
கோரியுள்ளதாக கூறப்படுகிறது.
வாக்குமூலம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, இதே சம்பவம் தொடர்பாக ஒக்டோபர் 9ஆம்
திகதியும் தங்காலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஏற்கனவே வாக்குமூலம்
அளித்திருந்தார்.
