Home இலங்கை குற்றம் யாழில் சூட்சுமமான முறையில் சட்டவிரோத மதுபானத்தை பொதி செய்த பெண் கைது

யாழில் சூட்சுமமான முறையில் சட்டவிரோத மதுபானத்தை பொதி செய்த பெண் கைது

0

யாழ். சுன்னாகம் பகுதியில் சூட்சுமமான முறையில் சட்டவிரோத மதுபானமான கசிப்பினை பொதி செய்து கொண்டிருந்த
பெண்ணொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பூதராயர் கோயிலடி பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய
பெண் ஒருவரே இவ்வாறு இன்றையதினம் (17.04.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினரின்
சுற்றிவளைப்பில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி வழிப்பறி

பொலிஸாரின் நடவடிக்கை 

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து பத்தாயிரம் மில்லிலீட்டர் கசிப்பும் அதனை பொதி
செய்ய பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், குறித்த பெண்ணை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை
பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகை தமிதாவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

மியன்மாரில் 15 இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version