Home இலங்கை நயினாதீவு நாகபூசணி அம்மன் மகோற்சவம் ஆரம்பம்; குவியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்

நயினாதீவு நாகபூசணி அம்மன் மகோற்சவம் ஆரம்பம்; குவியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்

0
image

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம் இன்றைய தினம் திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயத்திற்கு ஐந்து தலை நாக பாம்பு வாகனத்தில் கொடிச்சீலை எடுத்து வரப்பட்டது.

இன்றைய தினம் (15)கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் எதிர்வரும் 15 நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளது.

28 ஆம் திகதி தீர் திருவிழாவும், 29 ஆம் திகதி தீர்த்த உற்சபமும் இடம்பெறவுள்ளது.

இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பக்தர்கள் நயினாதீவுக்கு வருகை தந்து அம்பாளின் அருளைப் பெறுவதற்காக திரளாகக் கூடிவருகின்றனர்.

பக்தி, பாரம்பரியம் மற்றும் ஆன்மீக மகிமை நிறைந்த இம்மகோற்சவம், இந்து சமய மக்களின் முக்கியமான ஆன்மீக விழாக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

Source: https://samugammedia.com/nainatheevu-nagapooshani-amman-festival-begins-thousands-of-devotees-gather-1781511503

NO COMMENTS

Exit mobile version