இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுக்கு வாக்குமளிக்க வந்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித்த ராஜபக்ஷ விசாரணைகளின் பின்னர் ஆணைக்குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையில் அவர் இணைத்துக்கொள்ளப்பட்டது மற்றும் அவருக்கு வழங்கப்பட்ட பிரித்தானிய அரச கடற்படை கல்லூரியின் பயிற்சி தொடர்பான விசாரணைகளுக்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். விசாரணைகளின் பின்னர், ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
உண்மையில், அவர் நேற்று ஆணைக்குழுவில் முன்னிலையாக அழைக்கப்பட்டிருந்தார். எனினும், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணை ஒன்று இருப்பதால், தம்மால் முன்னிலையாக முடியாது என்று அவர் எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன் காரணமாகவே, அவரது வருகை இன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
