Home முக்கியச் செய்திகள் காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : கைப்பற்றப்பட்ட பயங்கர வாள்கள்

காவல்துறைக்கு கிடைத்த இரகசிய தகவல் : கைப்பற்றப்பட்ட பயங்கர வாள்கள்

0

குற்றச் செயலை மேற்கொள்ளும் நோக்கில் களுத்துறையிலுள்ள(kalutara) வீடொன்றில் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 வாள்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன் இந்த வாள்களை மறைத்து வைத்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டதாக களுத்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவு(cid) தெரிவித்துள்ளது.

இரண்டு பேர் கைது

களுத்துறை மிஹிகடவத்தை பிரதேசத்தை சேர்ந்த 35 மற்றும் 31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்ட வாள்கள்

களுத்துறை, மிஹிகதவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் வாள்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, உப காவல்துறை பரிசோதகர் பீ.ஆர்.வீரசேன உள்ளிட்ட அதிகாரிகள் அந்த வீட்டை சோதனையிட்ட போது, ​​கட்டில் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.   

NO COMMENTS

Exit mobile version