Home உலகம் வெளிநாடொன்றில் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து: பலர் பலி

வெளிநாடொன்றில் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து: பலர் பலி

0

தென் கொரியாவிலுள்ள (South Korea) இலித்தியம் மின்கல உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த தீ விபத்தானது தென் கொரிய தலைநகர் சியோலில் அமைந்துள்ள தொழிற்சாலையில் இன்று (24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்தில் சிக்கி 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து 

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், சுமார் 35,000 அலகுகளை கொண்ட தொழிற்சாலையின் களஞ்சிய பகுதிக்குள் மின்கலங்கள் வெடித்ததை அடுத்து தீப்பரவல் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்படுவதற்கு முன்பு தொழிற்சாலையில் மொத்தம் 100 பேர் வரையில் பணிபுரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்து  தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version