Home உலகம் வெளிநாடொன்றில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள்…!

வெளிநாடொன்றில் படுகொலை செய்யப்பட்ட அமெரிக்க வீரர்கள்…!

0

சிரியாவில் இரண்டு அமெரிக்க வீரர்களும் ஒரு அமெரிக்க சிவில் மொழிபெயர்ப்பாளரும் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

சிரியாவில் ஒரு தனி இஸ்லாமிய அரசு துப்பாக்கிதாரி நடத்திய தாக்குதலில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தாக்குதலில் மேலும் மூன்று படைவீரர்கள் காயமடைந்த நிலையில், துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளங்கள் 

அத்தோடு, கொல்லப்பட்டவர்களின் அடையாளங்கள் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்குத் தெரிவிக்கப்படும் வரை 24 மணி நேரம் மறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், “நீங்கள் அமெரிக்கர்களை குறிவைத்தால் உலகில் எங்கும் அமெரிக்கா உங்களை வேட்டையாடும்.

உங்களைக் கண்டுபிடித்து இரக்கமின்றி கொல்லும் என்பதை அறிந்து உங்கள் சுருக்கமான பதட்டமான வாழ்க்கையின் எஞ்சிய பகுதியை நீங்கள் கழிப்பீர்கள்.” என எச்சரித்துள்ளார்.

இது சர்வதேச களத்தில் ஒரு புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version