Home இலங்கை சமூகம் முல்லைத்தீவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

முல்லைத்தீவில் தும்பு தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

0

முல்லைத்தீவு (Mullaitivu) – விசுவமாடு வள்ளுவர்புரம் பகுதியில் அமைந்துள்ள தும்பு உற்பத்தி தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தானது இன்று (9) ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த தும்புத்தொழிற்சாலைக்கு கிளிநொச்சி
கரைச்சி பிரதேச சபையின் தீயணைப்பு வாகனங்கள் இரண்டு வரவழைக்கப்பட்டு தீயினை
கட்டுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து

வள்ளுவர்புரம் பகுதியில் பெண்களை கொண்ட சிறு கைத்தொழில் நிறுவனமாக இந்த
கைத்தொழில் தும்புத் தொழிற்சாலை நிறுவனம் கடந்து 8 ஆண்டுகளாக இயங்கி
வருகின்றது.12 பெண் தொழிலாளர்கள் இந்த தும்புத் தொழிற்சாலையில் பணியாற்றி
வருகின்றார்கள்.

இந்த நிலையில், தும்புகளை பிரித்து காய விடப்பட்ட இடத்தில் தீ விபத்து
ஏற்பட்டுள்ளது.

12 லட்சம் பெறுமதியான தும்புகள்

இதன்போது, தீயை கட்டுப்படுத்த முயற்சித்த போதும் கட்டுப்படுத்த முடியாத
நிலையில் பிரதேச செயலகம் ஊடாக கிளிநொச்சியிலிருந்து தீயணைப்பு பிரிவின் இரண்டு
வாகனங்கள் வரவழைக்கப்பட்டு முற்று முழுதாக நீர் பாய்ச்சப்பட்டு தும்புகளில்
பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதனால் 12 லட்சம் பெறுமதியான தும்புகளுக்குள் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகவும்
நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த தும்பு தொழிற்சாலையின் உரிமையாளர்
தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version