Home முக்கியச் செய்திகள் நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றவுள்ள சிறப்புரை : வெளியான அறிவிப்பு

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ஆற்றவுள்ள சிறப்புரை : வெளியான அறிவிப்பு

0

 ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, இன்று (24) இரவு ஏழு மணிக்கு ஆற்றவுள்ள இவ்வுரையில் விசேட அறிக்கையொன்று வெளியிடப்படவுள்ளது.

இதில் புதிய அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்களை ஜனாதிபதி அறிவிக்க உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

நிறைவேற்று அதிகாரம் 

இலங்கையில் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலானது கடந்த 21 ஆம் திகதி நடைபெற்றது.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்ற நிலையில் நேற்றையதினம் (23) ஜனாதிபதி செயலகத்தில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

இந்தநிலையில், இன்று (24) நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) இலங்கையின் 16 ஆவது பிரதமராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version