Home முக்கியச் செய்திகள் தமிழர் தாயகத்தில் பெண் ஆசிரியரின் அநாகரிக செயல் : மாணவன் வைத்தியசாலையில்

தமிழர் தாயகத்தில் பெண் ஆசிரியரின் அநாகரிக செயல் : மாணவன் வைத்தியசாலையில்

0

வவுனியாவில்(vavuniya) 14 வயது மாணவன் ஒருவருக்கு பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து பயிலுனர் ஆசிரியர் ஒருவர் இன்று (24.09) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கட்டுறு பயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச்(eastern province) சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவனுக்கு பாலியல் வன்கொடுமை

14 வயது மாணவன் ஒருவருக்கு குறித்த பயிலுனர் பெண் ஆசிரியர் பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்ததாகவும், இது தொடர்பில் பாடசாலையில் முறைப்பாடு செய்தும் தீர்வு கிடைக்காத நிலையில் மாணவனின் பெற்றோரால் சிறுவர் பிரிவு மற்றும் வவுனியா காவல்நிலையம் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது

பயிலுனர் ஆசிரியர் கைது

முறைப்பாட்டையடுத்து குறித்த மாணவனிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், மாணவன் மருத்துவ பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாக்கு மூலத்தின் அடிப்படையில் பயிலுனர் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version