Home இலங்கை அரசியல் பிள்ளையான் தரப்பின் ஆதரவை கோரிய அநுர கூட்டணி

பிள்ளையான் தரப்பின் ஆதரவை கோரிய அநுர கூட்டணி

0

மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான் கட்சியின் ஆதரவையும் தேசிய மக்கள் சக்தி கோரியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

குறித்த மாநகர சபையின் அதிகாரத்தை நிலைநாட்ட தேசிய மக்கள் சக்தி வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளைக் கூட மேற்கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு 

எனினும், தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாநகர சபையில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தமது கூட்டணி இரண்டு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மேயரை நியமித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version