Home இலங்கை அரசியல் வைரலாகும் அநுரவின் முகநூல் பதிவு!

வைரலாகும் அநுரவின் முகநூல் பதிவு!

0

இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் வெளியான தபால் மூல வாக்குகளுக்கான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், “அவர்கள் எங்களை புதைக்க முயற்சித்தார்கள், நாங்கள் விதைகள் என்று அவர்களுக்கு தெரியாது.” என பதிவிட்டுள்ளார்.

இந்த முகநூல் பதிவினை அநுரகுமாரவின் ஆதரவாளர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 

NO COMMENTS

Exit mobile version