தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனின் நமக்காக
நாம் தேர்தல் பிரசாரம் இன்று மூன்றாவது நாளாக கிளிநொச்சியில்
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நகரிலிருந்து வட்டக்கச்சி பிரதேசம் ஊடாக
தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாகவும் தனது
தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்த அவர்,
தமிழ் பொதுவேட்பாளர்
“சிலருக்கு தமிழ் பொதுவேட்பாளர் விடயம் காய்ச்சல் பிடித்திருக்கிறது.
சில
வேட்பாளர் விலக வேண்டும் என்று சொல்கின்றனர். அவர் வெல்லப்போவது இல்லை என்கின்றனர். வாக்கை
சிறகடிக்க போகின்றார் என்கின்றனர்.
இவரை தோற்கடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். என்னை
தோற்கடிப்பது என்பது இனத்தை தோற்கடிப்பதற்கு சமன்” என்றார்.
Source: https://tamilwin.com/article/arianethran-s-election-campaign-1724936006
