Home உலகம் மீண்டும் பலித்துள்ள பாபா வங்காவின் கணிப்பு! அதிர்ச்சியில் மக்கள்

மீண்டும் பலித்துள்ள பாபா வங்காவின் கணிப்பு! அதிர்ச்சியில் மக்கள்

0

உலகம் விஞ்ஞான அறிவியலை அடிப்படையாக கொண்டு நகரும் வேளையில் மக்கள் உலக சாத்திர சாரியான பாபா வங்காவின்(Baba Vanga) வாக்கிற்கு முக்கியம் கொடுக்கின்றனர்.

அந்தவகையில், தற்போதும் அவரின் கணிப்பொன்று தற்போதும் பலித்துள்ளது.பாபா வங்கா இதுவரை கணித்துள்ள பல சம்பவங்கள் நடந்தேறியுள்ள நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

அவர் வாழ்ந்த காலத்தை விட இறந்த பிறகு அவர் பல்வேறு உலக நிகழ்வுகளை சரியாக கணித்து முன்கூட்டியே சொன்னார் என்ற கதைகள் இணையம் முழுவதும் வைரலாக பரவிவருகின்றன.

பாபா வங்காவின் கணிப்பு

கொரோனா தொற்று நோய், இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான்(Japan) சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விடயங்கள் இவர் முன்கூட்டியே கணித்து உள்ளதாக அவரது சீடர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தவகையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின்(Vladimir Putin) மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) ஆகிய இருவரின் உயிருக்கு ஆபத்து என்று கணித்திருந்தார்.

அதாவது, ட்ரம்ப் ஒரு மர்மமான நோயை எதிர்கொள்வார் என்றும் அது அவரை காது கேளாதவராகவும், மூளைக் கட்டியால் பாதிக்கப்படுவார் என்றும் பாபா வாங்கா கணித்திருந்தார்.

ட்ரம்பின் கொலை முயற்சி

இந்நிலையில், பாபா வங்காவின் கணிப்பு முழுவதுமாக பலிக்கவில்லை என்றாலும் சமீபத்திய ட்ரம்பின் கொலை முயற்சி அதனை உண்மையாகும் விதத்தில் அமைந்துள்ளது.

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் நகரில் பிரச்சார கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த துப்பாக்கிசூட்டிற்கு இலக்கானார்.

இதில் அவரது வலது காதின் மேல் பகுதியை துளைத்தபடி குண்டு சென்றதில் ரத்தம் சொட்டியபடி அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டார்.

இதற்கு உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இதில், பாபா வங்கா கணித்தபடியே 2024 -ம் ஆண்டில் ட்ரம்பின் காதுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால், இவரது மற்ற கணிப்புகளும் பலித்து விடுமோ என்று உலக தலைவர்களும் மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version