Home உலகம் கனடாவில் கோர விபத்து : சம்பவ இடத்தில் பலியான யாழ்ப்பாண இளைஞன்

கனடாவில் கோர விபத்து : சம்பவ இடத்தில் பலியான யாழ்ப்பாண இளைஞன்

0

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஈழத்தமிழ் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ஒண்டாரியோவின் மார்க்கம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த இரண்டாம் (02) திகதி அதிகாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக கனடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம்(Jaffna) – நயினாதீவை(Nainativu) வசிப்பிடமாக கொண்ட 25 வயதான ஜெயகுமார் தனோஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

காணாமல் போன விமானம்: சடலமாக மீட்கப்பட்ட மலாவி துணை அதிபர்

காவல்துறை

நள்ளிரவில் வேகமாக பயணித்த வாகனம் கொங்ரீட் தூணில் மோதுண்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளதாக ஒண்டாரியோ மாகாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாகனம் மோதியதற்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஒண்டாரியோ மாகாண காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

உக்ரைன் உலக அமைதி உச்சி மாநாட்டில் பங்கேற்கும் 90 உலக நாடுகளின் தலைவர்கள்

வெளிநாடொன்றில் கொடூர தாக்குதலுக்கு இலக்கான அமெரிக்கர்கள்

இஸ்ரேலை விட்டு விலகாத ஆபத்துக்கள்: எந்த நேரமும் வெடித்துச் சிதறக்கூடிய எரிமலையின் உச்சத்தில் இஸ்ரேல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!

NO COMMENTS

Exit mobile version