2025 ஆம் ஆண்டில் கனடா அரசினால் நாடு கடத்தப்பட்ட புலம்பெயர்ந்தோர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில், 19,000 புலம்பெயர்ந்தோரை கனடா அரசு நாடுகடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாத நிலவரப்படி, 18,785 புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடா எல்லை
குறித்த விடயத்தை கனடா எல்லை சேவைகள் ஏஜன்சியின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாத எண்ணிக்கையையும் கணக்கில் சேர்த்தால் அந்த எண்ணிக்கை 18,969 ஐ தாண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 2023 இல் கனடா 15,207 பேரையும் மற்றும் 2024 இல் 17,357 பேரையும் நாடு கடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
