Home உலகம் ஏர் இந்தியா பேரழிவு: பலியான 241 பயணிகளில் இருந்த ஒரே ஒரு கனேடியர் இவர்தான்

ஏர் இந்தியா பேரழிவு: பலியான 241 பயணிகளில் இருந்த ஒரே ஒரு கனேடியர் இவர்தான்

0

இந்தியாவில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பயணத்தின் போதே விபத்துக்குள்ளான நிலையில், பயணித்த 241 பேர் உயிரிழந்தனர்.

இந்த பயணிகளுள் ஒரே ஷஒரு கனேடியர் உயிரிழந்ததுடன், அவர் நிராலி சுரேஷ்குமார் பட்டேல்(32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்தில் உள்ள மிசிசாகா நகரில் பல் மருத்துவராக பணியாற்றி வந்தவர்.

இந்தியா செல்லும் குடும்பம்

இந்த துயரச் செய்தி உறுதி செய்யப்பட்டதையடுத்து, நிராலியின் கணவர் ஊடகங்களிடம், “அவர் என் மனைவி. பேச முடியாத நிலைமையில் இருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

அதன்படி, தங்களது ஒரு வயது குழந்தையுடன் இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகளில் அவர் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்ராறியோ முதல்வர் இரங்கல்

இதனைதொடர்ந்து, ஒன்ராறியோ மாகாணத்தின் முதல்வர் டக் ஃபோர்ட், நிராலியின் குடும்பத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

சமூக வலைதளமான X-இல் வெளியிட்ட செய்தியில், “அகமதாபாத் அருகே நடந்த பயணிகள் விமான விபத்தில் மிசிசாகா நகரைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக அறிந்து மனமுடைந்தேன்.

பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினருக்கும், நெருங்கியவர்களுக்கும் ஒன்ராறியோ மக்களின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version