Home உலகம் இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொண்டது கொலம்பியா!

இஸ்ரேலுடனான உறவை முறித்துக்கொண்டது கொலம்பியா!

0

இஸ்ரேல் நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வதாக கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ இன்று (02) அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பொகோட்டாவில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர்கள் தின விழாவில் பங்கேற்ற பெட்ரோ, இனப்படுகொலை செய்யும் அரசுடனான தூதரக ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாக தெரிவித்தார். 

மேலும், காசாவில் நடைபெறும் மனித உரிமை மீறலை உலகம் வேடிக்கை பார்க்காது என்றும், அனைத்து நாடுகளும் தீவிர நிலைபாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை பக்கம் திரும்பிய இஸ்ரேலின் பார்வை: ஈரான் அதிபரின் விஜயத்திற்கு எதிர்ப்பு

உறவில் விரிசல்

காசா மீதான போர் தொடங்கியதில் இருந்தே இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வரும் பெட்ரோ, கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை நாஜிகளுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதிலிருந்து, இஸ்ரேல் – கொலம்பியா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், கொலம்பியாவுக்கான பாதுகாப்பு தளவாடங்கள் ஏற்றுமதியை இஸ்ரேல் நிறுத்தியிருந்தது.

இந்நிலையில், காசாவில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்தை கடந்துள்ளது.

இலங்கை பக்கம் திரும்பிய இஸ்ரேலின் பார்வை: ஈரான் அதிபரின் விஜயத்திற்கு எதிர்ப்பு

போராட்டம் தீவிரம்

இதன் எதிரொலியாக, இஸ்ரேல் பலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்து வருவதாகவும், இஸ்ரேலின் தாக்குதலை நிறுத்தக் கோரியும் இஸ்ரேலுக்கு எதிராக உலகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பலஸ்தீனத்தை விடுவிக்கக் கோரி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

காசா, ஈரானை தொடர்ந்து… இன்னொரு எல்லை நாடுடன் போர் தொடுக்க தயாராகும் இஸ்ரேல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்… 

NO COMMENTS

Exit mobile version