Home முக்கியச் செய்திகள் தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

தமிழர் பகுதியில் அமையவுள்ள அதானியின் காற்றாலை திட்டத்திற்கு அனுமதி மறுப்பு

0

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் வழங்கப்படவுள்ள 480 மெகாவாட் காற்றாலை மின் நிலையங்களை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான அனுமதி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று (23) தெரிவித்தார்.

இத்திட்டத்தின் மின்சாரம் கொள்வனவு தொடர்பாக இலங்கை மின்சார சபைக்கும் அதானி நிறுவனத்துக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படைத் தகவல்களை வழங்குமாறு மின்சார சபைக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.

வழங்கப்படாத தகவல்கள்

எனினும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு கோரிய  தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை.

அந்தத் தகவலின்றி திட்டத்தை ஆராய முடியாது எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார். 

அங்கீகாரம் வழங்க முடியாது

மன்னார் மற்றும் பூநகரி காற்றாலை மின் நிலையங்களுக்கு மின்சாரச் சட்டத்தின் கீழ் அங்கீகாரம் வழங்க முடியாது எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Source: https://ibctamil.com/article/commission-does-not-approve-two-wind-power-plants-1719156515?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version