Home உலகம் வெளிநாடொன்றில் உடைந்து விழுந்த களியாட்ட விடுதி – உயரும் பலி எண்ணிக்கை

வெளிநாடொன்றில் உடைந்து விழுந்த களியாட்ட விடுதி – உயரும் பலி எண்ணிக்கை

0

கரீபியன் தீவு நாடான டொமினிகனில் (Dominican Republic) இரவுநேர கேளிக்கை விடுதி மேற்கூரை சரிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 79 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த விபத்து சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பிரபல மெரெங்கு பாடகர் ரூபி பெரெஸின் ஜெட் செட் இரவு விடுதியில் நடந்த இசை நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ளது.    

உயிரிழந்தவர்களில் மாகாண ஆளுநரும் முன்னாள் மேஜர் லீக் பேஸ்பால் வீரருமான ஆக்டேவியோ டோட்டலும் பலியானவர்களில் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இரவுநேர கேளிக்கை விடுதி

மேலும், இந்த விபத்தில் 160 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அவசரகால செயல்பாட்டு மையத்தின் (COE) இயக்குனர் ஜுவான் மானுவல் மென்டெஸ், இடிந்து விழுந்த கூரையின் கீழ் சிக்கியுள்ளவர்களில் பலர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்புவதாகக் தெரிவித்துள்ளார்.  சுமார் 400 மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்து நடந்த இரவுநேர கேளிக்கை விடுதியில் விளையாட்டு வீரர்கள், அரசியல்வாதிகள் உட்பட சில புகழ்பெற்ற நபர்களும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

NO COMMENTS

Exit mobile version