Home இலங்கை அரசியல் சிலிண்டரை சின்னமாக்க தினேஷின் கூட்டணி தீர்மானம்

சிலிண்டரை சின்னமாக்க தினேஷின் கூட்டணி தீர்மானம்

0

முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பொது ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட தீர்மானம் மேற்கொண்டுள்ளது. 

மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணியின் நிறைவேற்று சபை கொழும்பில் நேற்று(03.10.2024) கூடியபோது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  தொடர்பான இறுதி இணக்கப்பாடு இன்று (4) எட்டப்படும் என கலந்துரையாடப்பட்டுள்ளது.

ரணில் தலைமையிலான கூட்டணி

இதன்போது, மக்கள் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களுக்கும் வேட்பாளர்களை முன்வைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அனேகமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டணியில் இணைந்து தமது கட்சி போட்டியிடும் என மக்கள் ஐக்கிய சுதந்திர முன்னணியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version