Home இலங்கை அரசியல் மன்னாரில் 98 வாக்களிப்பு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள்

மன்னாரில் 98 வாக்களிப்பு நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்ட வாக்குப் பெட்டிகள்

0

நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள்
நாளை (21) காலை இடம்பெறவுள்ளது.

இதனடிப்படையில், மன்னார் (Mannar) மாவட்டத்தில் 98 வாக்களிப்பு நிலையங்கள்
அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனைத்தும்
இன்று (20) காலை ஒன்பது மணி முதல் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

வாக்குப்பெட்டிகள் 

மன்னார் மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்திய நிலையமாக செயற்பட்டு வரும் மன்னார்
மாவட்டச் செயலகத்தில் இருந்து குறித்த வாக்குப்பெட்டிகள் அனைத்தும்
வாக்களிப்பு நிலையங்களுக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் பேருந்துகளின் மூலம்
எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும், மன்னார் மாவட்டத்தில் 90 ஆயிரத்து 607 வாக்காளர்கள் வாக்களிக்க
தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது..

NO COMMENTS

Exit mobile version