Home இலங்கை அரசியல் திருகோணமலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

திருகோணமலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் அனுப்பி வைப்பு

0

திருகோணமலையில் (Trincomalee), மொத்தமாக 318 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலானது நாளை (21)இடம் பெறவுள்ள நிலையில் வாக்கு சாவடிகளுக்கான
வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் குறித்த வாக்கெடுப்பு
நிலையங்களுக்கு இன்று (20)அனுப்பி வைக்கப்பட்டன.

திருகோணமலை 

இதனடிப்படையில், திருகோணமலை மாவட்டத்தில் குறித்த வாக்கு பெட்டிகளானது திருகோணமலை விபுலானந்தா
கல்லூரியில் வைத்து விநியோக நடவடிக்கை இடம்பெற்றது.

மொத்தமாக 318 வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகள் அனுப்பி
வைக்கப்பட்டதுடன் மொத்தமாக திருகோணமலை மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க
தகுதி பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version