Home முக்கியச் செய்திகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய நபர்

0

விசாரணைக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் (bandaranaike international airport) வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் (dubai) இருந்து நாடு திரும்பிய நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடைய கண்டியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் திணைக்களம்

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனமொன்றின் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி 108 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பண மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

NO COMMENTS

Exit mobile version