Home இலங்கை அரசியல் வேட்புமனுக்களை சமர்ப்பிக்காத மாவட்டங்கள் குறித்து வெளியான தகவல்

வேட்புமனுக்களை சமர்ப்பிக்காத மாவட்டங்கள் குறித்து வெளியான தகவல்

0

நாட்டிலுள்ள குறிப்பிட்ட ஐந்து மாவட்டங்களின் தேர்தல் தொகுதிகளில் நேற்று வரை எந்த அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக் குழுவோ வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri Lanka) தெரிவித்துள்ளது.

மாத்தளை (Matala), காலி (Galle), மாத்தறை (Matara), குருநாகல் (Kurunegala) மற்றும் பதுளை (Badulla) ஆகிய மாவட்டங்களிலேயே இவ்வாறு வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல்

இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்காக இதுவரை சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அடங்கலாக 33 குழுக்கள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யதுள்ளன.

இந்தநிலையில், நேற்றைய (08) தினம் வரை 17 அரசியல் கட்சிகளும் மற்றும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு

பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஒக்டோபர் நான்காம் திகதி ஆரம்பமாகி 11 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நிறைவடையவுள்ளது.

அத்தோடு, பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலம் எதிர்வரும் பத்தாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதற்கான விண்ணப்பங்கள் ஏற்கும் பணி நேற்று (08) நள்ளிரவுடன் முடிவடைந்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/districts-that-did-not-file-nominations-1728448298

NO COMMENTS

Exit mobile version