Home இலங்கை அரசியல் யாழ் மாவட்டத்தில் இதுவரை பதிவான வாக்களிப்பு : வெளியான தகவல்

யாழ் மாவட்டத்தில் இதுவரை பதிவான வாக்களிப்பு : வெளியான தகவல்

0

ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் காலை 10 மணி வரையிலான நிலவரப்படி 22.53 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றதாக யாழ்ப்பாண மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.அமல்ராஜ் தெரிவித்தார்.

ஐனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று வருகின்ற நிலையில் மக்கள்
ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

வாக்களிப்பு செயன்முறை 

இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு தொடர்ந்து 8.30
மணிவரையான ஒன்றரை மணித்தியாலத்திற்குள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் 8.7 வீத
வாக்களிப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு தொடர்ந்தும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருவதை அவதானிக்க
கூடியதாக உள்ளதாக செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version