Home முக்கியச் செய்திகள் அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!

அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு வெளியான முக்கிய அறிவித்தல்!

0

இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாத 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அதனை பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த திட்டமானது பிறப்புச் சான்றிதழ் இல்லாத காரணத்தால் இதுவரை தேசிய அடையாள அட்டையைப் பெற முடியாதவர்களுக்காக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மாலைதீவு நாடாளுமன்றத் தேர்தலில் சீனாவுக்கு ஆதரவான கட்சிக்கு அமோக வெற்றி…!

அடையாள அட்டை

அடையாள அட்டைக்கு விண்ணபிப்பதற்கான இறுதி நாளாக கடந்த 31 ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் பிரதேச செயலாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை அதனை நீடித்துள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் அதிபர் ரணிலுக்கு ஏற்படப்போகும் நெருக்கடி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகம் ஆரம்பம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version