Home உலகம் மகளின் பாதுகாப்பிற்காக தந்தை செய்த செயல் : தலையில் பூட்டப்பட்டது சிசிரிவி கமரா

மகளின் பாதுகாப்பிற்காக தந்தை செய்த செயல் : தலையில் பூட்டப்பட்டது சிசிரிவி கமரா

0

தந்தை ஒருவர் தனது மகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தந்தையொருவர் மகளின் தலையில் சிசிரிவி கமராவை பொருத்தியுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் இணையத்திலும் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தானின்(pakistan) கராச்சி நகரைச் சேர்ந்த தந்தை ஒருவரே, தனது மகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் மேற்படி செயலை செய்துள்ளார்.

அந்தப் பெண்ணும், தான் எங்கு சென்றாலும் தலையில் சிசிரிவி கமராவுடனேயே சென்று வருகிறார். இவ்வாறு அந்தப் பெண் தலையில் சிசிரிவியுடன் செல்லும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தந்தையின் செயலால் பாதுகாப்பு

இதுகுறித்து அந்தப் பெண் தெரிவிக்கையில், “நான் எங்கெல்லாம் சென்றுவருகிறேன், என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்வதற்காக எனது அப்பா என்னுடைய தலையில் சிசிரிவி கமராவை பொருத்தியுள்ளார்.

எனது தந்தைதான் என்னுடைய பாதுகாவலர். சிசிரிவி பொருத்தியிருப்பது எனக்கு பாதுகாப்பாகத்தான் உள்ளது.

கராச்சியில் பாலியல் வன்கொடுமைகள், தாக்குதல்கள், கொலைச் சம்பவங்கள் போன்றவை அரங்கேறி வருகின்றன. இதனால், எனது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் என் தந்தை சிசிரிவி கமராவை என் தலையில் பொருத்தியிருக்கிறார்.

வைரலான காணொளி

இதனைப் பொருத்துவதற்கு நான் என் தந்தையிடம் எந்தவொரு மறுப்பையும் தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார். 

இவர் தலையில் சிசிரிவி கமரா பொருத்தியுள்ள காணொளி தற்போது வைரலாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version