Home இலங்கை அரசியல் திருகோணமலையில் இறுதி செய்யப்பட்ட வேட்பு மனு தாக்கல்

திருகோணமலையில் இறுதி செய்யப்பட்ட வேட்பு மனு தாக்கல்

0

Courtesy: H A Roshan

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த 17 அரசியற் கட்சிகளும் 14 சுயேட்சை குழுக்களும் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திருகோணமலை மாவட்டத்தில் 20 அரசியல் கட்சிகளும் மற்றும் 17 சுயேட்சை குழுக்கள் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையிலேயே குறித்த ஏற்றுக்கொள்ளல் இடம்பெற்றுள்ளது.

இதில் மூன்று கட்சிகளும் மூன்று சுயேட்சை குழுக்களும் நிராகரிக்கப்பட்டதாக திருகோணமலை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல்

வேட்புமனுவின் பின் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (11) மாலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், தேசிய ஜனநாயக முண்ணனி, அகில இலங்கை தமிழர் மகா சபை, ஐக்கிய தேசிய சுதந்திர கூட்டமைப்பு உட்பட மூன்று சுயேட்சை குழுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டது என கூறியுள்ளார்.

சத்தியக் கடதாசி சமர்ப்பிக்காமை , சரியான முறையில் விண்ணப்பம் கையளிக்காமை உள்ளிட்ட காரணங்களால் இவை நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version