Home இலங்கை அந்தாட்டிக்காவில் இலங்கையரால் நிகழ்த்தப்பட்ட சாதனை

அந்தாட்டிக்காவில் இலங்கையரால் நிகழ்த்தப்பட்ட சாதனை

0

இலங்கையரான ஜொஹான் பீரிஸ் (Johann Peries) அந்தாட்டிக்காவில் (Antarctica) உள்ள மிக உயரமான மலையில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

அவர் 4,892 மீற்றர் வரையான உயரத்தை எட்டிய முதல் இலங்கையர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.  

உலகின் மிக உயரமான நான்கு சிகரங்கள்

இந்நிலையில், 2018 ஆம் ஆண்டில், ஜொஹான் பீரிஸ் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த இரண்டாவது இலங்கையர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.

இன்றுவரை, அவர் உலகின் மிக உயரமான நான்கு சிகரங்களான அவுஸ்திரேலியாவில் உள்ள கொஸ்கியஸ்கோ மலை, ஆபிரிக்காவில் கிளிமஞ்சாரோ மலை, ஐரோப்பாவின் எல்ப்ரஸ் சிகரம் மற்றும் ஆசியாவின் எவரெஸ்ட் சிகரம் போன்றவற்றில்  வெற்றிகரமாக ஏறி சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version