Home இலங்கை அரசியல் தேர்தல் இருந்து விலகும் முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்

தேர்தல் இருந்து விலகும் முன்னாள் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் (Sivasakthy Ananthan) நாடாளுமன்ற தேர்தலில்
பாேட்டியிட பாேவதில்லை என அறிவித்துள்ளார்.

ஈபிஆர்எல்எப் (Eelam People’s Revolutionary Liberation Front) கட்சியானது ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டனியில் அங்கத்துவம்
வகிப்பதுடன் சங்கு சின்னத்தில் பாேட்டியிடுகின்றது.

இதில் அக்கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறப்பினருமான சிவசக்தி
ஆனந்தன் வன்னித் தேர்தல் தாெகுதியில் பாேட்டியிடுவார் என
அறிவிக்கப்பட்டிருந்தது.

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம்

ஆனாலும் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்திற்கு ஏற்ப இளைஞர்களுக்கும்
புதியவர்களுக்கும் வழிவிடும் முகமாக இம்முறை தேர்தலில் பாேட்டியிடாமல்
இருப்பதற்கு தீர்மானித்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இவர் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றிருந்தார்.

இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சியின் அனைத்து பொறுப்புகளையும் துறப்பதற்கு அதன் தலைவர் மாவை சேனாதிராசா (Mavai Senathirajah) தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாவை சேனாதிராசா பதவியை துறந்தாலும் கட்சி உறுப்பினராக தொடர்ந்தும் பதவி வகிப்பாரென தெரிவிக்கப்படுகின்றது.

Source: https://ibctamil.com/article/former-mp-sivashakti-anandan-not-contest-election-1728275105

NO COMMENTS

Exit mobile version