Home உலகம் இந்தியா – கனடா இடையே விரிசல்!

இந்தியா – கனடா இடையே விரிசல்!

0

கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற மூத்த இராஜதந்திர அதிகாரிகளை திருப்பியழைக்கதாக இந்தியா அறிவித்துள்ளது.

காலிஸ்தான் அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பான விசாரணையில் இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் பிற தூதரக அதிகாரிகளை ‘ஆர்வமுள்ள நபர்கள்’ என்று கனடா அறிவித்ததற்கு பதிலடியாக இந்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை வந்ததுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை

கனடாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர்  திருப்பியழைப்பட்டதை அறிவிக்கும் அறிக்கையில்,

பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ “வாக்கு வங்கி அரசியல்” செய்வதாகவும், கனேடிய மண்ணில் பிரிவினைவாத கூறுகளை சமாளிக்க தேவையானவற்றை செய்யவில்லை என்றும் மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது.

பலமுறை கோரிக்கை விடுத்தும் நிஜ்ஜார் கொலையில் இந்தியா ஈடுபட்டதற்கான ஒரு சிறிய ஆதாரத்தையும் கனேடிய அரசாங்கம் பகிர்ந்து கொள்ளவில்லை என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு கடுமையான அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பிற இராஜதந்திரிகள் அந்நாட்டில் நடத்தப்படும் விசாரணை தொடர்பான விவகாரத்தில் ‘ஆர்வமுள்ள நபர்கள்’ என்று கனடாவில் இருந்து எங்களுக்கு நேற்று இராஜதந்திர தகவல் கிடைத்தது.

இந்திய அரசாங்கம் இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரிக்கிறது.

வாக்கு வங்கி அரசியலை மையமாகக் கொண்ட ட்ரூடோ அரசாங்கத்தின் அரசியல் இது என கூறியுள்ளது.

இந்தியா – கனடாவுக்கும் இடையிலான உறவு

கடந்த ஆண்டு செப்டம்பரில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனேடிய மண்ணில் காலிஸ்தானி அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசாங்க முகவர்களின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டியபோது, இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்தது.

அந்த குற்றச்சாட்டுகள் அபத்தமானது என்று மத்திய அரசு நிராகரித்தது.

அதன் தொடர்ச்சியாக சில காலம் விசா சேவைகளும் நிறுத்தப்பட்டது.

இந்திய உயர் அதிகாரி சஞ்சய் குமார் வர்மா, பலதுறைகளில் பணியாற்றி, நீண்ட அனுபவம் கொண்ட மூத்த முக்கியமான அதிகாரி ஆவார்.

ஜப்பான், சூடான், இத்தாலி, துருக்கி, வியட்நாம் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இந்தியாவின் சிறப்பு துாதராக இருந்து சிறப்பாக பணியாற்றியவர் என்பதுடன் அவருக்கு அரசுத் துறையில் 36 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு.

சமீபத்தில் லாவோஸ் நாட்டிற்கு ஆசியான் உச்சி மாநாட்டிற்கு பிரதமர் மோடி சென்றிருந்த போதுகூட கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இரு தரப்பு உறவு குறித்து பேசியுள்ளார்.

இந்த நிலையில், கனடா எங்களது அதிகாரிகளை ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டுவதாகவும், தனது மண்ணில் காலிஸ்தானி பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தத் தவறியதை நியாயப்படுத்த மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதாகவும் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

கனடாவில் இந்தியாவுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்ட நிஜ்ஜார், கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியாவில் வைத்து 2023 ஜூன் 18ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் இந்தியாவின் தொடர்பு குறித்து தொடர்ந்தும் குற்றம் சுமத்தி வரும் கனேடிய காவல், இந்தியர்கள் சிலரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version