Home உலகம் தொடரும் பதற்றமான நொடிகள் : காற்றை கிழித்து சீறிப்பாய்ந்த போர் விமானங்கள்

தொடரும் பதற்றமான நொடிகள் : காற்றை கிழித்து சீறிப்பாய்ந்த போர் விமானங்கள்

0

பஹல்காம் (Pahalgam) தாக்குதலுக்கு பிறகு, இந்திய விமானப்படையினர், போர் விமானங்களை அதிவேக வீதிகளில் தரையிறக்கி ஒத்திகையில் ஈடுபட்ட சம்பவம், பாகிஸ்தானை பதற்றமடையச் செய்துள்ளது.

ஜம்மு – காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காமில் கடந்த மாதம் 22ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு (Pakistan) எதிரான நடவடிக்கைகளில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்தியா – பாகிஸ்தான்

மேலும், இந்திய மக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளின் பின்னணியில் இருப்பவர்களை  விடமாட்டோம் என்றும், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதனால், எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கா அதிவேக வீதியில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டிருப்பது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர் விமானங்கள்

ஷாஜகான்பூரில் உள்ள கங்கா அதிவேக வீதியில், ரபேல், ஜாகுவார் மற்றும் மிராஜ் ஆகிய போர் விமானங்களை, அவசர காலங்களில் தரையிறக்கும் ஒத்திகையில் விமானப்படையினர் ஈடுபட்டனர். 

இரவு மற்றும் பகல் நேரங்களில் போர் விமானங்களை தரையிறக்கும் விதமாக, இந்தியாவில் முதல் ஓடுதளம் கங்கா அதிவேக வீதியில் அமைக்கப்பட்டுள்ளது. 

இது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1,000 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version