Home உலகம் அவமதிக்கப்பட்ட இந்தியர்கள்: ட்ரம்பின் உத்தரவினால் உருப்பெறும் பாரிய அதிர்வலைகள்

அவமதிக்கப்பட்ட இந்தியர்கள்: ட்ரம்பின் உத்தரவினால் உருப்பெறும் பாரிய அதிர்வலைகள்

0

அமெரிக்காவில் (US) இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கு போட்டிருந்தமை சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை இராணுவ விமானத்தில் ஏற்றும்போது, அவர்களது கை, கால்கள் கட்டுப்பட்டிருக்கும் காணொளி அமெரிக்கா எல்லை பாதுகாப்பு படையினரால் வெளியிடப்பட்டுள்ளது.

சம்பவத்தின் போது சுமார் 104 இந்தியர்கள் இவ்வாறு அமெரிக்க ராணுவ விமானத்தில் அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

காணொளி

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டதாக நேற்று புகைப்படங்கள் வெளியான நிலையில், அதனை மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் மறுத்து, அந்தப் புகைப்படங்கள் போலியானது என்று செய்திகளை வெளியிட்டிருந்தது.

எனினும், இந்தியாவிற்கே அதிர்ச்சி கொடுக்கும் விதமாக அது தொடர்பான காணொளியை அமெரிக்காவே வெளியிட்டிருந்தது.

இந்தியர்கள் அவமதிப்பு

இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இந்தியர்கள் பலர் கை, கால்களில் விலங்கிடப்பட்டிருந்ததாகவும் பயணம் முழுவதும் சங்கிலியால் பூட்டப்பட்டிருந்ததாகவும் விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கிய பிறகே சங்கிலி அகற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறனதொரு பின்னணியில், இந்தியர்கள் கைவிலங்கு போடப்பட்டு அவமதிக்கப்பட்டு அது தொடர்பான புகைபடங்கள் நேற்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தமை தொடர்பில் இந்திய தரப்பிலிருந்து கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், காங்கிரஸ் கட்சியும் இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. 

Source: https://ibctamil.com/article/illegal-indians-deported-from-the-us-1738833745

NO COMMENTS

Exit mobile version