Home இலங்கை அரசியல் மட்டக்களப்பில் இந்திய உயஸ்தானிகர் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியினருடனான முக்கிய சந்திப்பு

மட்டக்களப்பில் இந்திய உயஸ்தானிகர் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியினருடனான முக்கிய சந்திப்பு

0

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய பிரதிநிதிகளுக்கும், இந்திய
உயர்ஸ்தானிகருக்குமான சந்திப்பொன்று மட்டக்களப்பில் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது சமகால அரசியல், ஜனாதிபதி தேர்தல், தமிழ் மக்களுடைய அரசியல் பிரச்சனைகள், அரசியல் சம்மந்தமான பிரச்சனைகள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

முன்வைக்கப்பட்ட கோரிக்கை 

அம்பாறை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசனால் கல்முனையில் கலாசார மண்டபமொன்றினை தாபிப்பதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் , இவர் கிழக்கு மாகாணத்தில் Indian High Commission அலுவலகத்தினையும் அமைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதில் மட்டக்களப்பு,
அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அத்துடன் ஏனைய அரசியல் பிரதிநிதிகளும், மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக மாநகர சபை முதல்வர், இளைஞர்
அணித் தலைவர், மகளிர் அணியினுடைய உப தலைவி ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்கள் கலந்து
கொண்டதோடு,  திருகோணமலை அங்கத்துவப் பிரதிநிதிகள் தவிர்க்கமுடியாத காரணத்தினால்
வருகை தர முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version