தற்போது இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டிருப்பது சமூக ஊடகப்பரப்பிலே பரவலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கடந்த பெப்ரவரி மாதம் 19ஆம் திகதி கணேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்தான் இஷாரா செவ்வந்தி.
குறித்த பெண் இவ்வளவு காலமும் தலைமறைவாகி இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் இஷாரா செவ்வந்தியின் கைது மட்டுமல்ல யார் எங்கே கைது செய்யப்பட்டாலும் அதற்கு முன்னர் இது குறித்த தகவல்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஊடறுப்பு நிகழ்ச்சியில் லங்கா சிறியின் பிராந்திய செய்தியாளர் டில்சான் கலந்து கொண்டு மேலும் கருத்து தெரிவிக்கையில்…
