Home உலகம் உலக எரிசக்தி சந்தையை உலுக்கிய இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்

உலக எரிசக்தி சந்தையை உலுக்கிய இஸ்ரேலின் அதிரடி தாக்குதல்

0

ஈரானில் (Iran) உள்ள உலகின் மிகப்பாரிய எரிவாயு வயல் மீது இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகஙகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, இஸ்ரேலானது ஈரானின் South Pars எரிவாயு வயலில் நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதல், உலக எரிசக்தி சந்தையையே உலுக்கி விடும் ஒரு பரிதாபமான கட்டத்திற்கு இழுத்து சென்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எரிவாயு தேவை

குறித்த தாக்குதல் மூலம் தினசரி 1.2 கோடி கனமீட்டர் எரிவாயு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

South Pars களம் ஈரான் மற்றும் காத்தாரால் பகிர்ந்துகொள்ளப்படுகின்ற நிலையில், இது ஈரானின் 66 சதவீத உள்நாட்டு எரிவாயு தேவையை பூர்த்தி செய்கிறது.

ஆற்றல் நெருக்கடி

இருப்பினும், தற்போது ஏற்பட்ட தீ விபத்து மற்றும் உற்பத்தி பாதிப்பால் ஈரானில் மின்தடை தொழிற்சாலை செயலிழப்பு போன்ற விளைவுகள் உருவாகியுள்ளது.

இந்த தாக்குதல், ஈரானின் இராணுவ மற்றும் அணு உள்கட்டமைப்புகளை விட, ஆக்கிரமிப்பாகக் கருதப்படும் பொருளாதார உள்கட்டமைப்பை குறிவைத்து இஸ்ரேல் எடுத்துள்ள முதலாவது நடவடிக்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இது ஏற்கனவே கடுமையான ஆற்றல் நெருக்கடியில் உள்ள ஈரானை மேலும் பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அதிரவைக்கும் தாக்கம்

இதுபோன்ற தாக்குதல்கள் Strait of Hormuz, Kharg Island போன்ற முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் மார்க்கெட்டுகளையும் பாதிக்கக்கூடும் என வலியுத்தப்பட்டுள்ளது.

மொத்த உலக எரிசக்தி விலை ஏற்கனவே 14 சதவீதம் உயர்ந்துள்ளதுள்ள நிலையில் இந்த சிக்கல் தொடர்ந்தால் ஐரோப்பா, ஆசியா உள்ளிட்ட பகுதி நாடுகளில் எரிபொருள் விலை உயரும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன் தாக்கம் உலகளாவிய பொருளாதாரத்தில் புயலை உருவாக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version