Home இலங்கை அரசியல் கண்டியில் சஜித்திற்கு ஆதரவாக நடத்திய மாவனெல்ல கபீர் கூட்டத்தில் குழப்பம்: கேள்விகேட்ட நபர் மீது தாக்குதல்

கண்டியில் சஜித்திற்கு ஆதரவாக நடத்திய மாவனெல்ல கபீர் கூட்டத்தில் குழப்பம்: கேள்விகேட்ட நபர் மீது தாக்குதல்

0

கண்டி – மாவனெல்லயில் இன்று (09) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

பிரசார கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் உரையாடி கொண்டிருக்கும் போது, 30 வருடங்களாக முஸ்லிம்களை ஏமாற்றி வருவதாக கூட்டத்திற்கு வந்திருந்த ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கேளியெழுப்பிய நபர் 

இதனையடுத்து, கோபமடைந்த கபீர் ஹாசிம் அவரை மேடைக்கு வந்து பேசுமாறு கூற, எங்களை ஏமாற்ற வேண்டாம் என்று கூறியபோது, அங்கு சென்றிருந்தவர்கள் கூச்சலிட குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அங்கிருந்தவர்கள் அவரை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளதுடன் கபீர் ஹாசிம் அவசரமாக பேச்சை முடித்துக் கொண்டு வெளியேறியுள்ளார்.

மேலும், கேள்விகேட்ட நபர் அங்கிருந்தவர்களால் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

Source: https://tamilwin.com/article/issue-in-kandy-sajith-s-campaign-meeting-1725888223

NO COMMENTS

Exit mobile version