Home முக்கியச் செய்திகள் தமிழ் பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல்: விளக்கமளித்துள்ள சுமந்திரன்

தமிழ் பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல்: விளக்கமளித்துள்ள சுமந்திரன்

0

தமிழ் பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக  பிரதி காவல்துறை மா அதிபர் ஒருவர் அறிவித்துள்ள விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளதாக தழிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றையதினம்  (18) இடம்பெற்ற ஊடகவியாலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 “தமிழ் பொது வேட்பாளருக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக , முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு கண்காணிப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் பிரதி காவல்துறை மா அதிபர் பொது வேட்பாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அந்த கடிதத்தில். உங்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து காணப்படுவதாகவும், நீங்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் சுமந்திரன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தேர்தல் குற்றமாகும். இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறையிட்டுள்ளேன்” 

குறித்த விடயம் தொடர்பில் சுமந்திரன் மேலும் கூறுகையில், 

https://www.youtube.com/embed/yaKTzv7wXTo

NO COMMENTS

Exit mobile version