Home உலகம் ஐந்து மாதங்களுக்கு பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார் இளவரசி கேட்

ஐந்து மாதங்களுக்கு பின்னர் பொது நிகழ்வில் பங்கேற்றார் இளவரசி கேட்

0

பிரித்தானியாவின் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்ரன் (kate middleton)ஐந்து மாதங்களுக்குப் பிறகு முதன்முறையாக இன்று (15) பொது நிகழ்வில் இணைந்தார்.

சுமார் 5 மாதங்களுக்கு முன்பு, அவருக்கு புற்றுநோய் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

வேல்ஸ் இளவரசி இன்று காலை இளவரசர் வில்லியமுடன் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வந்தார்.

மூன்று குழந்தைகளுடன் வண்டியில்

பின்னர் அரச அணிவகுப்பின் ஒரு பகுதியாக சார்லஸ் மன்னரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் வருடாந்திர “ட்ரூப்பிங் தி கலர்” ராணுவ அணிவகுப்பில் இளவரசி கேட் தனது மூன்று குழந்தைகளுடன் வண்டியில் சென்றார்.

கேத்தரினும் அவரது குழந்தைகளும் வெலிங்டனின் முன்னாள் அலுவலகத்தில் ஜன்னலில் இருந்து நிகழ்வைப் பார்த்தனர்.

பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல்முறை

ஜனவரி மாதம் புற்றுநோயைக் கண்டறிந்து, வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் பொதுவெளியில் தோன்றுவது இதுவே முதல்முறை

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் அரண்மனையிலிருந்து குதிரைக் காவலர் அணிவகுப்பின் பாதையில் அணிவகுத்து மீண்டும் திரும்பினர்.

NO COMMENTS

Exit mobile version