Home இலங்கை அரசியல் திருகோணமலையில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த குகதாசன் எம்.பி

திருகோணமலையில் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்த குகதாசன் எம்.பி

0

திருகோணமலை (Trincomalee) – குச்சவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை மரவாடி மக்களின் மக்கள் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்வுகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் இன்று (16) வரசக்தி விநாயகர் கோயில் முன்றலில் நடைபெற்றது

திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் (K. S. Kugathasan) தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

மக்களினுடைய பிரச்சினைகள் 

இதன்போது, குறித்த பகுதி மக்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாடாளுமன்ற உறுப்பினரிடத்தில் முன்வைத்தனர்.

யானை பிரச்சினை, யானை வேலி, சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் இந்து மயான குறைபாடு போன்ற
பிரச்சினைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதேவேளை பிரச்சினைகளை கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் விடயங்களை ஆராய்ந்து
தீர்ப்பதற்கான நவடிக்கைகளை மேற்கொள்வதாக மக்களிடத்தில் உறுதியளித்தமை குறிப்பிடடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version